பேலியகொடை மீன் சந்தையில் பணத்தாளின் மூலம் பரவிய கொரோனா? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, November 3, 2020

பேலியகொடை மீன் சந்தையில் பணத்தாளின் மூலம் பரவிய கொரோனா?

கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்க காரணமாக இருந்த கொழும்பு பேலியகொடை மீன் சந்தை கொரோனா கொத்தனியில் எப்படி வைரஸ் பரவியது என்பது கண்டறியப்பட்டுள்ளது.



பணத்தாள் மற்றும் மீனவர்களால் சத்தமிடும்போது வெளியாகும் எச்சில் போன்றவற்றால் கொரோனா பி-1.42 ரக தொற்றுப்பிரிவு பரவியிருப்பதாக சுகாதார அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மினுவங்கொடை கொரோனா கொத்தனி கடந்த மாதம் 3ஆம் திகதி பரவ ஆரம்பித்தது.

எனினும் அதனை மிஞ்சிய பேலியகொடை மீன்சந்தை கொத்தனி ஒக்டோபர் 21ஆம் திகதி பரவ ஆரம்பித்து இன்றுவரை பாரிய அளவில் வியாபித்து வருகின்றது.