ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் டிக்கோயா கிளை ஆற்றிலேயே உருகுநிலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த டிக்கோயா ஆற்றுக்கு குப்பை கொட்டுவதற்கு சென்ற இளைஞன் ஒருவரினால் குறித்த சடலம் இனங்கானபட்டது.
அடுத்து ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கபட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சடலம் இதுவரை அடையாளம் கானப்படவில்லையெனவும் சடலமாக மீட்கப்பட்ட நபர் 35 வயது மதிக்கதக்கவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் ஹட்டன் நீதவான் தலைமையில் மரண விசாரனைகள் இடம்பெற்றவுடன் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரீசோதனைக்காக சடலம் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட உள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.