பிரேஸிலில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆயிரத்தை கடந்தது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, August 17, 2020

பிரேஸிலில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆயிரத்தை கடந்தது!

 

கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆயிரத்தைக் கடந்துள்ளது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொலம்பியாவில் 15ஆயிரத்து 97பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட எட்டாவது இடத்தில் உள்ள கொலம்பியாவில் இதுவரை மொத்தமாக நான்கு இலட்சத்து 68ஆயிரத்து 332பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொலம்பியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 11,643பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 287பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது வரை ஒரு இலட்சத்து 65ஆயிரத்து 799பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 493பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

அத்துடன் இதுவரை இரண்டு இலட்சத்து 87ஆயிரத்து 436பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்