![](https://www.thaarakam.com/wp-content/uploads/2020/07/625.200.560.350.160.300.053.800.300.160.90-2-13.jpg)
இலங்கைக்கு வந்த அமெரிக்கர் ஒருவர் பஸ்ஸில் பயணம் செய்தபோதே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்
யக்கலை பிரதேசத்தில் பேருந்தில் ஏறிய இந்த நபர், கண்டிக்கு அருகில் செல்லும் போது மயக்கமுற்று இருந்ததால் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னரே அவர் இறந்து விட்டதாக வைத்தியசாலையில் கடமையில் இருந்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.