![](https://www.thaarakam.com/wp-content/uploads/2020/07/625.200.560.350.160.300.053.800.300.160.90-1-17.jpg)
கால்வாய் ஒன்றுக்குள் கார் ஒன்று கவிழ்ந்து வீழ்ந்துள்ளது. குறித்த விபத்தில் சாரதி காருக்குள் இருந்து பாய்ந்து அதிர்ஷ்டவாசமாக உயிர்தப்பியுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று சனிக்கிழமை காலை கொழும்பு – 15 மட்டக்குளி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் காரை மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தினால் காருக்குள் சேற்று நீர் புகுந்து சேதமடைந்துள்ளது
சம்பவம் தொடர்பில் மட்டக்குளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்