யாழில் வாங்கிய கடனுக்கா மனைவியை கிழவனுக்கு விற்ற கணவன்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, July 3, 2020

யாழில் வாங்கிய கடனுக்கா மனைவியை கிழவனுக்கு விற்ற கணவன்!



வாங்கிய கடனுக்காக மனைவியை விற்ற கணவருக்கு, மனைவியின் சகோதரர்கள், உறவினர்கள், ஊரவர்கள் ‘முறையான’ கவனிப்புக் கொடுத்தனர். அடிஉதை தாங்காது ஓடியவர் இரண்டு நாள்கள் கடந்தும் வீட்டுக்கு வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பழைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ஒருவர் பலரிடமும் வட்டிக் கடன் வாங்கியுள்ளார். அவர் வட்டியையும் கடனையும் கட்ட முடியாமல் திண்டாடியுள்ளார். ஒரு கட்டத்தில் ஊரிலிருந்து யாழ்ப்பாண நகருக்கு வந்து விடுதி ஒன்றில் மனைவியுடன் தங்கியுள்ளார். பின்னர் அறையைப் பூட்டி விட்டு வெளியேறியுள்ளார்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த கடன் வழங்கிய முதியவர் ஒருவர் மனைவியிடம், வாங்கிய கடனுக்கு கணவன் உன்னை விற்று விட்டான் என்று கூறியுள்ளார். இதனையடுத்து அந்தப் பெண் அவரை சரமாரியாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி வந்துள்ளார். சகோதரர்கள், உறவினர்களுக்கு தகவலைத் தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து கணவனைத் தேடிக் கண்டுபிடித்து அவரை ‘முறையாக’ கவனித்தனர். இதனால் அவர் ஊரிலிருந்து ஓடித் தப்பியுள்ளார்.


இருப்பினும் இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் இதுவரை முறைப்பாடு பதிவு செய்யப்படவில்லை