ஒட்டுக்குழு விநாயகமூர்த்தி முரளிதரனிடம் சிங்கள குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சுமார் 7 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.
தென் தமிழீழம் , அம்பாறை பகுதியில் வைத்து கடந்த 23 ஆம் திகதி அவர் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார்.
குறித்த கருத்து தொடர்பில் பதில் காவல் துறை மா அதிபரின் அறிவுரைக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
ஆணையிறவில் ஒரே இரவில் இரண்டு மூவராயிரம் இராணுவத்தினரை கொலை செய்ததாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.