உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்த பெண்ணொருவர் 14 மாதங்கள் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
![](https://www.todayjaffna.com/wp-content/uploads/2020/06/75456852_2604245569830551_3555533298436326824_n.jpg)
36 வயதான திலின ஹர்ஷினி என்ற 3 பிள்ளைகளின் தாயாரே வீடு திரும்பியுள்ளார்.
நீர்கொழும்பு கட்டுவபிட்டி தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் இவர் காயமடைந்தார்.
இவர் நடன ஆசிரியராவார். தாக்குதலில் முள்ளந்தண்டு கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பிய போதிலும், பூரண குணமடையவில்லை, சில பகுதி உணர்வற்றிருப்பதாக தெரிவித்துள்ளார். இடது கண் அகற்றப்பட்டுள்ளது. விரல்கள் சரியாக செயற்படாமலுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது, அவரும் மூன்று பிள்ளைகளும் தேவாலயத்தில் இருந்தனர். அவரது ஆறு வயதுடைய இரண்டாவது மகன் தாக்குதலில் உயிரிழந்தார். மற்ற பிள்ளைகளும் காயமடைந்து, குணமடைந்துள்ளனர்.
![](https://www.todayjaffna.com/wp-content/uploads/2020/06/106097657_2604245566497218_994679300286687147_n.jpg)
அவர் பலத்த காயங்களுடன் ராகம போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலை, தனியார் வைத்தியசாலையொன்றில் பல அறுவை சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.