காட்டுப் பகுதிக்கு தேன் எடுக்கச் சென்ற மாணவன் பரிதாபமாக சாவு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, May 28, 2020

காட்டுப் பகுதிக்கு தேன் எடுக்கச் சென்ற மாணவன் பரிதாபமாக சாவு!

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்மதவாச்சி காட்டுப் பகுதிக்கு தேன் எடுக்கச் சென்ற மாணவன் நேற்று மாலை உயிரிழந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.


நிலாவெளி கைலேஸ்வரன் மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்று வந்த சாம்பல்தீவு பகுதியைச் சேர்ந்த நடராசா ஆதவன் என்ற 19 வயதுடைய மாணவன் குடும்ப கஷ்டநிலை காரணமாக, விடுமுறை காலத்தில் கூலித் தொழில் செய்து வந்த நிலையில் மூன்று பேருடன் தேன் எடுப்பதற்காக காட்டுக்குச் சென்றுள்ளார்.

16 அடி உயரமான மரத்தில் ஏறி மரத்தை வெட்டியபோது மரத்தின் கிளை இவர் மீது விழுந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்துக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எஸ்.எம். றூமி சென்று பார்வையிட்டதுடன் சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.

சடலம் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும், இறப்பு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்