காவல்துறை தாக்குதலில் காயமடைந்தவர்களிற்கு உணவு கொண்டு சென்றவர்கள் கைது - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, May 1, 2020

காவல்துறை தாக்குதலில் காயமடைந்தவர்களிற்கு உணவு கொண்டு சென்றவர்கள் கைது

யாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் பொலிஸாரின் தாக்குதலில் காயம அடைந்தவர்களுக்கு உணவு கொண்டு சென்ற இரு பெண்கள் ஊரடங்கு சட்டத்தை மீ றியதாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இன்று காலை குடத்தனை- மாளிகைகாடு பகுதியில் பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடாத்திய சம்பவம் இடம்பெற்றிருந்தது. இந்த சம்பவத்தில் 3 பேர் காயம டைந்த நிலையில் பருத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு உணவு எடுத்து சென்ற நிலையிலேயே குறித்த பெண்கள் இருவரும் ஊரடங்கு சட்டத்தை மீறியதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதேவேளை அவர்கள் அனுமதி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர்.