உலக நாடுகளில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து செல்கின்ற நிலையில், இலங்கையில் சிறந்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகளினால் அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிந்துள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்று நோயாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை படிப்படியாக குறைந்த மட்டத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.