கொரோனா சந்தேகத்தின் பேரில் யாழ்.போதனா வைத்தியசாலையில் 6 பேர் அனுமதி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, April 13, 2020

கொரோனா சந்தேகத்தின் பேரில் யாழ்.போதனா வைத்தியசாலையில் 6 பேர் அனுமதி



கொரோனா சந்தேகத்தின் பேரில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 6 பேர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.
நேற்றய தினம் 4 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு பரிசோதனை நடாத்தப்பட்டு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்றைய தினம் கொரோனா சந்தேகத்தில் 6 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அவர்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் மாலையில் பரிசோதனை அறிக்கை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.