இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சம்பவித்த 3ஆவது உயிரிழப்பு குறித்து விளக்கம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, April 1, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சம்பவித்த 3ஆவது உயிரிழப்பு குறித்து விளக்கம்

நேற்று (01) இரவு கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக சம்பவித்த மூன்றாவது மரணம் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க, மேலதிக விபரங்களை உறுதி செய்துள்ளார்.

73 வயதான ஆண் நபரே மரணமானதுடன் இவர் கொழும்பு மருதானை பிரதேசத்தைச் சேர்ந்தவர். ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தபோது இவர் கொரோனா வைரஸ் தொற்று நோயாளியென நேற்றைய (01) தினம் உறுதி செய்யப்பட்டார்.

இந்த நோயாளி அடையாளங்காணப்பட்டு கொழும்பு IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவேளையில் மரணமானார் (On Admission Death)

இந்த நோயாளி நீரிழிவு, இரத்த அழுத்தம், நீண்ட காலமாக சிறுநீரக பாதிப்பு ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டிருந்தார். குறித்த நோயாளி நோய் உச்சக்கட்டத்தை எட்டிய வேளையிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றால் முதலாவது மரணம் கடந்த 28ஆம் திகதி பதிவானமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட 146 பேரில் தற்போது 122 நோயாளிகள் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 21 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

மருத்துவ மனைகளில் தற்போது 231 பேர் கொரோனா தொற்று தொடர்பான சந்தேகத்தின் பேரில் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது