கொரோனாவில் இருந்து பாதுகாக்க இஞ்சி – ஆயுர்வேத மருந்தக கூட்டுத்தாபனத்தின் திட்டம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, March 12, 2020

கொரோனாவில் இருந்து பாதுகாக்க இஞ்சி – ஆயுர்வேத மருந்தக கூட்டுத்தாபனத்தின் திட்டம்

கொரோனா வைரஸில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க சுதேசிய ஆயுர்வேத முறையொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஆயுர்வேத மருந்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இதற்கு தேவையான இஞ்சியை சரியான வகையில் உலர்த்துவதற்கான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கு தயாராகி வருவதாகவும் அந்த கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸுக்கு ஆயர்வேத சுதேசிய மருந்தக கூட்டுத்தாபனம் ரத்த கல்க்கய, புத்தராய கல்க்கய, நவரத்ன கல்க்கய, சீதாராமகுலி ஆகியவற்றை பெருமளவில் சந்தைக்கு விநியோகித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் உற்பத்தியாளர்களிடம் இருந்து உலர்த்தப்படாத இஞ்சியை கொள்வனவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஓரு கிலோ இஞ்சி 80.00 ரூபாயிற்கும் 90.00 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலைக்கு வழங்க விருப்பம் உள்ளோர் அது தொடர்பாக 011 2850229 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியும் எனவும் மொத்தமாகவும் கொள்வனவு செய்யப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.