ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான விசேட செய்தி.! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, March 30, 2020

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான விசேட செய்தி.!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இன்று, மார்ச் (30) பிற்பகல் 2.00 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 01, புதன்கிழமை காலை 6.00 மணி வரை அமுலில் இருக்கும்.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன் கண்டி மாவட்டத்தில் அக்குரணை மற்றும் களுத்துறை மாவட்டத்தில் அட்டுலுகம தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. எவரும் இந்த கிராமங்களுக்குள் உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ மறு அறிவித்தல் வரை முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.