
நாட்டில் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் இதன்போது முழுமையாக மீளாய்வு செய்யப்பட்டதோடு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இதன்படி பின்வரும் விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
* கையில் பணமிருந்தும் உணவு உட்பட அத்தியாவசிய சேவைகள் இன்னும் கிடைக்கப் பெறாதவர்களுக்கு அவற்றை வழங்கும் தற்போதுள்ள நடைமுறையில் மீளாய்வு.
* மருந்துகளை விநியோகித்தல் தொடர்பில் அஞ்சல் திணைக்களத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய திட்டம் குறித்த கவனம்.
* கையில் பணம் இல்லாத ஆனால் வங்கிகளில் பணத்தை கொண்டிருப்போர் அவற்றை மீளப் பெற்றுக் கொள்வதற்கான உத்திகள்.
* சமூர்த்தி பயனாளிகளுக்கான 5000 ரூபாய் கொடுப்பனவை 2020-03- 31 க்கு முன்னர் பூர்த்தி செய்தல்.
* கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் காரணமாக தொழில்களை இழந்து அரசாங்கத்தின் உதவி பட்டியலில் சேர்க்கப்படாதோருக்கான நிவாரண வழிமுறைகள்.
* உணவு பொருட்களின் உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதன் அவசியமும் அரிசி, மரக்கறிகள், மீன், கோழி இறைச்சி ஆகியவற்றில் அடுத்த பருவத்தில் தன்னிறைவை அடைதலும்.
* விலங்கு உணவுகளின் விநியோகத்தையும் போக்குவரத்தையும் முன்னேற்றுவதன் மூலமாக இலங்கையின் கால்நடை தொழில் துறையை பேணுவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்.