கொரோனா தொற்றியவர்கள் எண்ணிக்கை 76 ஆக அதிகரிப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, March 21, 2020

கொரோனா தொற்றியவர்கள் எண்ணிக்கை 76 ஆக அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு பேர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இனங்காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி, இதுவரை 76 ​பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான இருவர் பொலன்னறுவை வைத்தியசாலையிலும் மற்றுமொருவர் அநுராதபுரம் பொது வைத்தியசாலைகளில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்கள் மூவரும் கண்காணிப்பு மத்திய நிலையங்களில் ஏற்கனவே சிகிச்சை பெற்றவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஐ.டி.எச் வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான இருவர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், தேசிய வைத்தியசாலையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுவரை நாடு பூராகவும் உள்ள 18 வைத்தியசாலைகளில் 245 பேர் கொரோனா தொற்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.