சூத்திரத்தை நடைமுறைப்படுத்தி இருந்தால் எரிபொருள் விலை 20 ரூபாயினால் குறைந்திருக்கும் – மங்கள - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, March 10, 2020

சூத்திரத்தை நடைமுறைப்படுத்தி இருந்தால் எரிபொருள் விலை 20 ரூபாயினால் குறைந்திருக்கும் – மங்கள

ஐக்கிய தேசியக் கட்சி அறிமுகப்படுத்திய எரிபொருள் விலை சூத்திரத்தை தற்போது செயற்படுத்தியிருந்தால் எரிபொருட்களின் விலை 20 ரூபாயினால் குறைத்திருக்கும் என முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் விலைகளுக்கு அமைய, நுகர்வோருக்கு அதிகபட்ச நன்மைகளை வழங்குவதற்காக எரிபொருள் விலை சூத்திரத்தின் படி ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “கடந்த அரசாங்கம் அறிமுகப்படுத்திய எரிபொருள் விலை சூத்திரைத்தை இதுவரை காலம் செயற்படுத்தியிருந்தால், மார்ச் 10 முதல் அனைத்து வகையான எரிபொருட்களின் விலை லீட்டருக்கு குறைந்தது 20 ரூபாயினால் குறைத்திருக்க முடியும்.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் உலக சந்தையில் எரிபொருள் விலைகளை ஒப்பிட்டு உள்ளூரில் நுகர்வோருக்கு அதிபட்ச நன்மைகளை பெற்றுக் கொடுப்பதற்காக எரிபொருள் விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் ஒவ்வொரு மாதமும் 10 திகதிகளில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இப்போது சர்வதேச எண்ணெய் விலை பீப்பாய்க்கு 65 அமெரிக்க டொலரிருந்து 45 அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளது.

அத்துடன் நல்லாட்சி அரசாங்கம் மற்றொரு அத்தியாவசிய பொருட்களான உள்நாட்டு எரிவாயுவிற்கான விலை சூத்திரத்தையும் அறிமுகப்படுத்தியது. செப்டம்பர் 2019 இல் எரிபொருள் விலை இறுதியாக திருத்தப்பட்டது.

இதன் விளைவாக, 2015 ஆம் ஆண்டில் 2,000 ருபாய்க்கும் அதிகமான விலையில் விற்கப்பட்ட 12.5 கிலோகிராம் எரிவாயுவிற்கான விலை 1,500 ஆக குறைக்கப்பட்டது” என அவர் சுட்டிக்காட்டினார்.