சீனாவில் ஒரு வாரத்திற்கும் குறைவாக சிகிச்சை பெற்ற 103 வயதான மூதாட்டி வைரஸிலிருந்து குணமடைந்துள்ளார்.
மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹானில் உள்ள டோங்ஜி மருத்துவக் கல்லூரியின் லியுவான் இணைப்பு மருத்துவமனையில், மார்ச் 1 ம் திகதி அன்று 103 வயதான ஜாங் குவாங்பென் என்கிற மூதாட்டி கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதோடு, அந்த நேரத்தில் அவர் ஆபத்தான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது மருத்துவர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என மருத்துவர் ஒருவர் உள்ளூர் ஊடகங்கள் பேட்டியளித்துள்ளார்.
![](https://dimg.zoftcdn.com/s1/photos/news/full/2019/01/zhang001/img/625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg)
செவிலியர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்ததன் பலனாக குணமடைந்த அவர், நேற்று மதியம் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இதன்மூலம் இதுவரை சீனாவில் குணமடைந்த மிகவும் வயதான கொரோனா வைரஸ் நோயாளி மற்றும் இதற்கு முன் குணமடைந்த 101 வயது நபரை அடுத்த இரண்டாவது நபர் என்கிற பெருமையும் பெற்றுள்ளார்.
![](https://dimg.zoftcdn.com/s1/photos/news/full/2019/01/zhang002/img/625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg)
![](https://dimg.zoftcdn.com/s1/photos/news/full/2019/01/zhang003/img/625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg)