மனதை பிசைந்த தாயொருவரின் அழுகுரல்... இரக்கமில்லாதவர் பார்க்கவேண்டாம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, February 5, 2020

மனதை பிசைந்த தாயொருவரின் அழுகுரல்... இரக்கமில்லாதவர் பார்க்கவேண்டாம்!

முல்லைத்தீவு – நாயாற்று பகுதியில், நேற்று முன்தினம் இரவு, கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடும் கடற்றொழிலாளர் ஒருவரின் வாடிகள், இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

நாயாற்று பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர், வாடி அமைத்து கடற்றொழிலுக்காக புத்தளத்தில் இருந்து வேலைக்கு ஆட்களை வைத்து கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார் .

குறித்த நபரின் வாடிகளே இனந்தெரியாதவர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இதன்போது வாடிகள் இரண்டும், அதில் இருந்த கடற்றொழிலுக்குப் பயன்படும் இரண்டு இலட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான உபகரணங்களும் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன் படகு ஒன்றும் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதனையடுத்து சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.