சிங்கள தலைவர்கள் படித்த பாடம் காணாது: சிறி வாத்தி கருத்து - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, February 5, 2020

சிங்கள தலைவர்கள் படித்த பாடம் காணாது: சிறி வாத்தி கருத்து

சிங்களத் தலைவர்கள் கடந்த கால படிப்பினைகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

அத்துடன், உரிமைகளைத் தரமறுத்த போதுதான் தமிழர்கள் போராடினார்கள் என சுட்டிக்காட்டியுள்ள அவர், விமல் வீரவன்ஸ ஓரு நவீன மனநோயாளி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கட்டைக்காடு, கேவில் பகுதியில் மக்களுடனான சந்திபொன்றை அவர் மேற்கொண்டிருந்தார். இதில், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சு.சுரேன், உப தவிசாளர் கயன், பிரதேசசபை உறுப்பினர்களான ரமேஸ், வீரவாகுதேவர் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதி ஞானம், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது ஸ்ரீதரன் உரையாற்றுகையில், “காணாமல் ஆக்கப்பட்டவர்களை மண்ணுக்குள் தோண்டித் தேடுங்கள் என்ற அமைச்சர் விமல் வீரவன்சவின் கருத்து மனநிலை பாதித்தவர் ஒருவரின் கதையாகத்தான் உள்ளது. இந்த அரசாங்கம் தாங்கள் புதைத்த இடத்தைக்காட்ட வேண்டும்.

வீமல் வீரவன்ச ஒரு நவீன மனநோயாளி. இந்த அரசாங்கம் தமிழர்களை அடக்கி ஆளவும் ஓடுக்கி ஆளவும் தொடர்ந்து முயற்சிக்கிறது.

இந்நாட்டின் ஜனாதிபதி தொடக்கம் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் அனைவரும் தமிழர்களை கொடூர வெறியுடனேயே பார்க்கிறார்கள். தமிழர்களின் இரத்தங்களைக் குடிக்கக் காத்துக்கொண்டிருப்பது போன்றும் அவர்களின் செயற்பாடுகள் அமைந்து கொண்டிருக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.