புதையல் தோண்டிய 7 பேர் கைது - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, February 11, 2020

புதையல் தோண்டிய 7 பேர் கைது

தென்தமிழீழம்: மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் சட்ட விரோத புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 7 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் அதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள சிறிலஙிகா இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று இரவு மேற்கொண்ட தேடுதல் பணியின்போது கிரான் பூலாக்காடு பிரதேசத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் கண்டி அல்கடுவ,கோமாகம மற்றும் கோரகல்லி மடு கிரான் பிரதேசங்களை சேர்ந்த மும்மதத்தினை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், பூசைப் பொருட்கள், மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் பொருட்க்கள் என்பன வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் , பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.