முச்சக்கர வண்டியுடன் வேன்று ஒன்றும் நேருக்கு நேர் மோதி தாய் - மகள் இருவரும் பலி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, January 18, 2020

முச்சக்கர வண்டியுடன் வேன்று ஒன்றும் நேருக்கு நேர் மோதி தாய் - மகள் இருவரும் பலி!

நாரம்மல-குளியாபடிய வீதியின் தங்கொல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.


குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், முச்சக்கர வண்டியுடன் வேன்று ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதன் காரணமாகவே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரொம்பாவ-கொரொக்கலவத்த பிரதேசத்தைச் சேர்ந்த தாயும் மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கர வண்டியின் சாரதி பலத்த காயங்களுடன் நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.