கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவரென அடையாளங் காணப்பட்டுள்ள சீனப் பெண், மாத்தளை- கவுடுபெலல்ல பிரதேச ஓட்டலொன்றில் உணவு வாங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளதுடன், குறித்த ஹோட்டல், அதனை அண்மித்த பிரதேசங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குறித்த ஹோட்டலின் பணியாளர்கள், பிரதேசவாசிகளுக்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக மாத்தளை பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் சேபாலி விக்ரமதிலக தெரிவித்தார்