உலகம் சுற்றும் வாலிபனாக நித்தியானந்தா! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, January 7, 2020

உலகம் சுற்றும் வாலிபனாக நித்தியானந்தா!

தினம் தினம் வீடியோக்களை வெளியிட்டு பகீர் கிளப்பி வரும் நித்தியானந்தா பற்றிய புதிய பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.


நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் இந்தியா அரசு திண்டாடி வரும் நிலையில், தென்னமெரிக்கா நாடுகளை சுற்றி வலம் வந்து கொண்டிருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.

சொகுசு கப்பலை வாடகைக்கு எடுத்து அதில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஈக்வடோர் நாட்டில் இருந்து துரத்தப்பட்டதாக கூறப்படும் நித்தியானந்த குழு, தற்போது சொகுசுக்கப்பலில் தலைமறைவு வாழ்க்கை வாழ்வதாகவும் சொல்லப்படுகிறது.

விமானத்தில் பயணித்தால் பாஸ்போர்ட் தேவைப்படும். ஆனால் சொகுசு கப்பலில் எந்த நாட்டின் எல்லையிலும் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் பாஸ்போர்ட் இல்லாமல் பயணிக்கலாம். இதனால் நித்தியானந்தா உலகம் சுற்றும் வாலிபனாக பல நாடுகளில் அகதி குடியுரிமை கோரி அலைந்து வருகிறார். நித்யானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டு விட்டதாக இந்திய அரசாங்கம் வெளிப்படையாக அறிவித்து விட்டதால், எந்த நாடும் நித்தியானந்தா புகலிடம் தர மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த நித்யானந்தா தான் யாருக்கும் எதிரி இல்லை. இந்தியா தான் தனக்கு உயிர் என்றும் கூறி வருகிறார்.

சிஷ்யையை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு, இன்னொரு சிஷ்யையை மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் சில நாட்களில் நீதிமன்றம் முக்கிய அறிவிப்பை வெளியிடலாம் என்றும் கூறப்படுகிறது.