தேர்தல் விதிகளை மீறிய 4 ஊடகங்களிற்கு தேர்தல் முடிவுகள் வழங்கப்படாது: தேர்தல் ஆணையாளர் அதிரடி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, November 13, 2019

தேர்தல் விதிகளை மீறிய 4 ஊடகங்களிற்கு தேர்தல் முடிவுகள் வழங்கப்படாது: தேர்தல் ஆணையாளர் அதிரடி!


தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்ட 4 ஊடகங்களிற்கு தேர்தல் முடிவுகள் வழங்கப்படாது என அறிவித்துள்ளார் தேர்தல்கள் ஆணையாளர்.

அரச ஊடகங்களான இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி சேவை மற்றும் தனியார் ஊடகங்களான ஹிரு, தெரண ஆகியவவை தேர்தல் விதிகளை மீறி, வேட்பாளர்களை ஆதரித்திருந்தன. அரச ஊடகங்கள் இரண்டும் சஜித் பிரேமதாசவையும், தனியார் ஊடகங்கள் இரண்டும் கோட்டாபய ராஜபக்சவையும் ஆதரித்திருந்தன.

இதையடுத்து, இந்த நான்கு ஊடகங்களிற்கும் தேர்தல் முடிவுகளை வழங்குவதில்லையென அதிரடி முடிவெடுத்துள்ளார் தேர்தல்கள் ஆணையாளர். இன்று இந்த அறிவிப்பை விடுத்தார்.