சந்திராயன்-3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப இஸ்ரோ முடிவு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, November 14, 2019

சந்திராயன்-3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப இஸ்ரோ முடிவு

சந்திராயன்-3 விண்கலத்தை அடுத்த ஆண்டு நிலவுக்கு அனுப்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.


கடந்த 2008 ஆம் ஆண்டு சந்திரயான்-1 விண்கலத்தை இஸ்ரோ நிலவிற்கு அனுப்பியது.

இந்த விண்கலம் நிலவிலுள்ள சூழல்கள், கனிமங்கள் குறித்து ஆய்வு செய்தது. இதனையடுத்து சந்திரயான்-1 விண்கலம் 2009 ஆம் ஆண்டு தனது ஆயுட்காலம் நிறைவடைந்து.

பின்னர் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை, இஸ்ரோ அனுப்பியது. ஆனால், நிலவில் இருந்து 2.1 கி.மீ. தொலைவில் விக்ரம் லேண்டர் இருந்தபோது, அதனுடன் இருந்த தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதிலிருந்து பிரிந்த ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவைச் சுற்றிவந்து நல்ல முறையில் ஆய்வை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் சந்திராயன்-3 திட்டம் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை நடத்தினர்.

இதன்போது, சந்திரயான்-3 மூலம் லேண்டர் மற்றும் ரோவரை மட்டும் அனுப்ப விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். எனவே இந்தப் பணிகள் அடுத்த ஆண்டு (2020) நவம்பர் மாதம் செயற்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது