பொலிசாரால் கிழித்தெறியப்பட்ட சஜித்தின் சுவரொட்டிகள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, October 8, 2019

பொலிசாரால் கிழித்தெறியப்பட்ட சஜித்தின் சுவரொட்டிகள்!



ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் என அறிவிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவின் புகைப்படத்துடனான சுவரொட்டிகள் வவுனியாவில் வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடங்களில் பரவலாக ஒட்டப்பட்டிருந்தன.

‘புதிய இலங்கைக்கு சஜித்’ எனும் பெயரில் குறிப்பிட்டு பரவலாக வவுனியா நகர், மன்னார் வீதி, குருமன்காட்டு சந்தி, வைரவப்புளியங்குளம் போன்ற பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தது.

இச்சுவரொட்டிகளை நேற்று (07.10.2019) மாலை வவுனியா பொலிஸார் நடமாடும் பொலிஸாரின் வாகனத்தில் சென்று கிழித்தெறிந்தனர். இவ்விடயம் தொடர்பாக சுவரொட்டிகளை அகற்றிய பொலிஸாரிடம் வினவிய போது

தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் போன்றவற்றை காட்சிப்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் வாகன அல்லது மக்கள் பேரணிகள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகரவிடம் இருந்து எமக்கு கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தலின் பிரகாரம் இதனை மேற்கொள்வதாக தெரிவித்தனர்.