சாய்ந்தமருது குண்டுதாரிகள் வீட்டில் தீவிர தேடுதல் நடவடிக்கை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, September 6, 2019

சாய்ந்தமருது குண்டுதாரிகள் வீட்டில் தீவிர தேடுதல் நடவடிக்கை!



அம்பாறை கல்முனை சாய்ந்தமருதில் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு பின்னர் தற்கொலை குண்டுதாரிகள் வெடித்து உயிரிழந்த வீட்டில் கடந்த இரு நாட்களாக பாதுகாப்பு தரப்பினர் தீவிர தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று முன்தினம் கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் உள்ள குறித்த வீட்டின் நிலத்தினை தோண்டி படையினர் சோதனை மேற்கொண்டனர்.

இதன் போது வீட்டின் காணியில் புதைக்கப்பட்ட நிலையில் பென் ரைவ் (Prn Drive) மற்றும் சேதமடைந்த நிலையில் Tap ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த சோதனை மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் ஏப்ரல்-21 இல் தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரிகள் பயன்படுத்திய தொலைபேசி தரவுகள் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.