வென்னப்புவ பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைத்ததாக குறிப்பிட்டு கைது செய்யப்பட்ட வென்னப்புவ பிரதேசசபை உறுப்பினர் துலாக்ஷி பெர்னாண்டோ மற்றும் அவரது சகோதரி ஆகியோரின் விளக்கமறியல் செப்ரெம்பர் 11ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இன்று (06) மராவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
21 வயதான பிரதேசசபை உறுப்பினர் மற்றும் அவரது 1 வயது சகோதரி ஓகஸ்ட் 20ம் திகதி கைது செய்யப்பட்டனர்.