ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
அதற்கமைய அவர் நாளை (திங்கட்கிழமை) இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
வடக்கிற்கு விஜயம் செய்யும் அவர், நாளை காலை யாழ். முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கண்காட்சியில் பங்கேற்கவுள்ளார்.
அதனையடுத்து பிற்பகல் ஒருமணியளவில் கிளிநொச்சிக்கு செல்லும் அமைச்சர், கண்டாவளை மற்றும் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தலா இரண்டு வீடமைப்புத் திட்டங்களை மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.
என்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கண்காட்சி நேற்று யாழில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வினை ஆரம்பித்து வைப்பதற்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் பிரதமர் ரணில் மாத்திரமே இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.