ஞானசார தேரர் என்ன சொல்கிறார்? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, September 24, 2019

ஞானசார தேரர் என்ன சொல்கிறார்?

இந்து- பெளத்த மோதலை உரு­வாக்க நாம் ஒரு­போதும் நினைக்­க­வில்லை. ஆனால் நாட்டில் அனைத்து பகு­தி­க­ளுக்கும் செயற்­படும் சட்­டத்தை  வடக்கு கிழக்கில் மாத்­திரம் தட்­டிக்­க­ழிக்க முயற்­சிப்­பதே முரண்­பா­டாக உள்­ள­தென   பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர்  தெரி­வித்தார்.

நீதி­மன்ற தீர்ப்பு தாம­த­மா­கவே  தேரரின் பூதவுடலை தகனம் செய்தோம் எனவும்  அவர் குறிப்­பிட்டார்.

முல்­லைத்­தீவு செம்­மலை நீரா­வி­யடி பிள்­ளையார் ஆலய வளா­கத்தில் கொலம்பே மேதா­லங்­கார தேரரின் பூத­வுடல்  தகனம் செய்­யப்­பட்ட விடயம் குறித்து தமிழ் மக்கள் மத்­தியில் பாரிய எதிர்ப்பு எழுந்­துள்­ளது.    பொது­பல சேனா பெளத்த அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஜான­சார தேரரின் தலை­யீட்டில் இடம்­பெற்­ற­தாக விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில் இது குறித்து அவர் கருத்து கூறு­கை­யி­லேயே  இதனை தெரி­வித்தார்.

அவர் கூறி­ய­தா­னது,

இந்து -பெளத்த மக்கள் மத்­தியில்  இன முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்த வேண்­டு­மென்ற நோக்கம்  எம்­மத்­தியில் இல்லை. கொழும்­பிலும் ஏனைய  சிங்­கள பகு­தி­க­ளிலும் தமிழ் சிங்­கள மக்கள் மிகவும் நல்ல உணர்­வுடன் ஆலய மத நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து ஒற்­று­மை­யாக செயற்­பட்டு வரு­கின்­றனர். ஆனால் வடக்­கிலும் கிழக்­கிலும் மாத்­திரம் அந்த நிலை­மைகள் இல்­லாது பௌத்தம் புறக்­க­ணிக்­கப்­பட்டு இன­வாதம் பரப்­பப்­பட்டு அர­சியல் தூண்­டு­தல்கள் மற்றும் அர­சியல் சுய­நலம் கார­ண­மாக முரண்­பா­டுகள் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வதை எம்மால் ஏற்­று­கொள்ள முடி­யாது.

 அது­மட்டும் அல்ல அந்த பூமி விகா­ரைக்கு உரித்­தான பகு­தி­யாகும். இந்­துக்­க­ளுக்கு எவ்­வாறு அங்கு சகல உரி­மையும் உள்­ளதோ அதேபோல் பௌத்­தர்­க­ளுக்கும் சம உரிமை உண்டு. அங்கு எமது தேரர் ஒரு­வ­ருக்கு நெருக்­கடி என்றால் எம்மால் வேடிக்கை பார்க்க முடி­யாது.  இந்த நாட்டில் பெளத்த சிங்­கள முதன்­மைத்­துவம் அர­சியல் அமைப்பில் கூறப்­பட்­டுள்ள நிலையில் அது வடக்கு கிழக்­குக்கு பொருந்­தாது என்றே அவர்கள் நினைக்­கின்­றனர். இந்த விட­யத்தில் சட்­டத்­து­றையை நாடிய சட்­டத்­த­ர­ணி­களும் அவ்­வா­றான ஒரு பிரி­வி­னை­வாத நிலைப்­பாட்டில் இருந்தே  வாதா­டவும் முன்­வ­ரு­கின்­றனர். அதேபோல்  தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு இவ்­வாறு பிரி­வி­னை­களை தூண்டி நாட்டில் இல்­லாத பிரச்­சி­னை­களை உரு­வாக்­கு­கின்­றனர். இவ்­வா­றான நிலையில் நீதி­மன்­றத்தின் தீர்ப்பு என்­ன­வாக இருந்­தாலும் நாம் எமது உரி­மை­களை விட்­டுக்­கொ­டுக்க மாட்டோம்.

கேள்வி:- எனினும் யுத்­தத்­திற்கு பின்னர் இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்பில் இருந்த ஒரு பகு­தியில் விகாரை அமைத்து பழ­மை­வாய்ந்த விநா­யகர் ஆலய பகு­தியை புறக்­க­ணிப்­பது ஏற்­று­கொள்ள முடி­யா­தென்ற நிலைப்­பாடு மக்கள் மத்­தியில் உள்­ளதே?

தேரர்:- யுத்­த­கா­லத்தில் கைப்­பற்­றப்­பட்­ட­தாக கூறு­வது தவறு. இங்கு மேதா­லங்­கார தேரர் நீண்­ட­கா­ல­மாக இருந்தார். ஏன் வடக்கு கிழக்கில் விகா­ரை­களை அமைக்­கக்­கூ­டாதா. அத­னையா தமிழ் சமூகம் சார்பில் வலி­யு­றுத்­து­கின்­றீர்கள்.

கேள்வி:- இல்லை, இந்து ஆலய வளா­கத்தில் தகனம் செய்­த­தையே தவ­றென மக்கள் கூறு­கின்­றனர். இது இந்­துக்­களை வேத­னைப்­ப­டுத்தும் வித­மாக அமைந்­துள்­ளதே?

தேரர்:- ஆல­யத்தில் அவ்­வாறு நடந்­து­கொள்­ள­வில்லை. விகா­ரைக்கு உரிய இடத்­தி­லேயே நாம் அவ்­வாறு செய்தோம். அத்­துடன் நீதி­மன்­றத்தை அவ­ம­திக்­கவும் இல்லை. தீர்ப்பு வரும்­வரை உடலை வைத்­தி­ருக்க முடி­யாது. ஆகவே நாம் அவ்­வாறு நடந்­து­கொண்டோம். இதனை இந்து பெளத்த மோதலாக பார்க்க வேண்டாம்.

கேள்வி :- தமிழ் தேசிய கூட்டமைப்பு இதில் எவ்வாறு தொடர்புபட்டது? நீங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை குறைகூற காரணம் என்ன ?

தேரர்:- அவர்கள் தான் மக்களை தூண்டிவிட்டு இவ்வாறு குழப்பங்களை ஏற்படுத்தியதாக தகவல் கிடைத்தது. அனைவரும் இதனை அரசியலாக மாற்றவே முயற்சிக்கின்றனர்.