எமக்கு வாய்ப்பளித்துப் பாருங்கள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, September 10, 2019

எமக்கு வாய்ப்பளித்துப் பாருங்கள்!



வெறு­மனே ஆட்­சி­யா­ளர்கள் தமது தலை­களை மாற்­றிக்­கொண்டு வழ­மை­யான ஊழல்வாத அர­சி­யலை செய்ய இனியும் இட­ம­ளிக்­க­க்கூ­டாது. இந்த ஜனா­தி­பதி தேர்­தலில்  மக்­களின் பலத்­தைக்­கொண்டு அடுத்த பொதுத் தேர்­தலில் அர­சியல் மாற்றம் ஒன்­றினை செய்­வதே எமது இலக்­காகும்   என தேசிய மக்கள் சக்­தியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் அநு­ர­கு­மார திசா­நா­யக தெரி­வித்தார்.

இந்த ஒரு முறை எமக்கு வாய்ப்­ப­ளித்து பாருங்கள் ஜன­நா­யக மாற்­றத்­தையும், அதேபோல் ஜனா­தி­ப­திகள் வச­மி­ருந்த மக்­களின் சொத்­துக்­க­ளையும்  மக்கள் மய­மாக்­கிக்­காட்­டு­கின்றோம்  எனவும் அவர் வாக்­கு­றுதி வழங்­கினார்.

தேசிய மக்கள் சக்­தியின் அனு­ரா­த­புரம்  மக்கள் சந்­திப்பில்  நேற்று முன்­தினம் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

அவர் இங்கு மேலும் உரை­யாற்­று­கையில்

இன்று ஜனா­தி­பதி தேர்தல் ஒன்­றுக்­காக நாம் இயங்கி வரு­கின்றோம். இந்த தேர்தல் இந்த நாட்­டுக்­கான ஆட்­சி­யாளர் ஒரு­வ­ரையும் அர­சாங்கம் ஒன்­றி­னையும் உரு­வாக்கும் முக்­கிய தேர்­த­லாகும். ஜனா­தி­பதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என்­பன  மிகவும் எதிர்­பார்ப்பு மிக்க தேர்­தல்­க­ளாகும். இதில் மக்கள் எதிர்­பார்ப்­புடன் ஆட்­சி­யா­ளர்­களை நிய­மித்து குறு­கிய காலத்தில் அர­சாங்­கத்­தையும் ஆட்­சி­யா­ளர்­க­ளையும் விமர்­சிக்க ஆரம்­பித்து விடு­வார்கள். 

இந்த விமர்­ச­னங்கள், குற்­றச்­சாட்­டுக்­களில் மாத்­திரம் ஆட்­சியை மாற்­றி­விட முடி­யாது. மாறாக மக்கள் சரி­யான மாற்றம் ஒன்­றினை உரு­வாக்க வேண்டும். மாற்­றத்தை உரு­வாக்கும் அதி­காரம் மக்­க­ளி­டமே உள்­ளது. ஐந்து ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை மக்­களின் அதி­கா­ரத்தை ஒரு குழு­வி­ன­ருக்கு வழங்­கு­கின்­றனர். இம்­முறை இந்த அதி­கா­ரத்தை யார் கைகளில் கொடுக்க வேண்டும் என்­பதை மக்­களே தீர்­மா­னிக்க வேண்டும்.

இன்று எமக்கு எவ்­வா­றான ஆட்சி வேண்டும் என்­பதை சிந்­திக்க வேண்டும். இந்த நாட்டில் ஏற்­பட்­டுள்ள வீழ்ச்­சியில் இருந்து மீளும்  ஆட்­சி­யொன்று வேண்டும். ஆகவே இத்  தருணம் மிகவும் முக்­கி­ய­மான தரு­ண­மாகும். இது­வரை கால­மாக மக்கள் உரு­வாக்­கிய ஆட்­சிகள் பல­வீ­ன­மான ஆட்சி என்­பது தொடர்ச்­சி­யாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஜன­நா­ய­கத்தை உரு­வாக்க கொண்­டு­வ­ரப்­பட்ட ஆட்­சி­யா­ளர்கள் முதலில் ஜன­நா­ய­கத்­தையே மீறி­னார்கள். 

அதேபோல் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப வந்­த­தாக கூரி­ய­வர்கள் செய்­த­தெல்லாம் கள­வு­களும் கொல்­லை­க­ளு­மே­யாகும். ஜன­நா­யகம் என கூறி­ய­வர்கள் மூல­மாக வெள்­ளைவேன் கடத்தல், கொலைகள், குற்­றங்கள் அதி­க­ரித்­த­தையும் கடன்­களை வாங்கி நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை நாச­மாக்­கி­ய­துமே நில­வின. இவ்­வாறு ஆட்­சியில் இருந்­த­வர்கள்  மாறி மாறி தமது நாச­கார வேலை­யி­னையே செய்­தனர். 

ஒரு ஆட்­சி­யாளர் மீது நம்­பிக்கை வைத்து அவரை தெரிவு செய்­வதும் பின்னர் அவர் ஊழல் வாதி­யென அவரை மாற்­று­வ­து­மாக இதே சக்­க­ரமே சுழன்­று­கொண்­டுள்­ளது. இனி­யா­வது மக்கள் இதில் இருந்து விடு­பட வேண்டும். இந்த சுழற்­சியை இந்த தேர்­த­லி­லா­வது நிறுத்­த­வேண்டும். இனியும் இந்த இரண்டு பிர­தான அணி­யையும் நம்பி வாக்­க­ளிக்க முடியும் என மக்கள் நினை­கின்­றீர்­களா? இனியும் இவர்­களில் எவ­ரையும் மக்­களால் நம்ப முடி­யாது.

இனியும் இவர்­களால் நாட்­டினை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது. தனி நபர்­களை கொண்டு இந்த நாட்டை பலப்­ப­டுத்த முடி­யாது. ஒரு நாட்­டினை கட்­டி­யெ­ழு­பு­வது என்­பது மாயா­ஜால வேலை அல்ல. இந்த நாட்­டினை நேசிக்கும் நபர்கள் மூல­மா­கவே இந்த நாட்­டினை கட்­டி­யெ­ழுப்ப வேண்டும். மக்­க­ளுக்கு ஏற்­படும் கஷ்­டங்­களை தமக்கு ஏற்­படும் கஷ்­ட­மாக  நினைத்து வேலை செய்யும் நபர்­களே இந்த நாட்­டினை முன்­னோக்கி கொண்­டு­செல்ல முடியும். 

ஆனால் இந்த ஆட்­சி­யா­ளர்கள் அவ்­வாறு மக்கள் குறித்து  சிந்­திக்கும் ஆட்­சி­யா­ளர்கள் அல்ல. இவர்கள் தமது சுக­போக வாழ்க்­கையை மட்­டுமே சிந்­தித்து ஆட்சி செய்­கின்­றனர். ஆகவே மக்­க­ளுக்­கான அணி இன்று உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. தேசிய மக்கள் சக்­தி­யுடன் மக்கள் இணைய வேண்­டிய தருணம் வந்­துள்­ளது. இப்­போது எமக்­குள்ள நோக்கம் இந்த தேர்­தலை அடிப்­ப­டை­யாக கொண்டு அடுத்த பொதுத் தேர்­தலில் ஆட்சி மாற்றம் ஒன்று வேண்டும் என்­ப­தே­யாகும். தனி நபரை மாற்றி எந்த நன்­மையும் கிடைக்­கப்­போ­வ­தில்லை. 

ஆகவே அடுத்த பொதுத் தேர்­தலில் ஆட்சி மாற்றம் ஒன்­றினை உரு­வாக்­கு­வதே எமது பிர­தான நோக்­க­மாகும். இந்த தேர்­தலில் மக்­களின் எதி­ரிக்கும் மக்­களின் நண்­ப­னுக்கும் இடை­யி­லான போட்­டியே இடம்­பெ­று­கின்­றது. இதில் பெரிய எதிரி யார் சின்ன எதிரி யார் என்ற காரணம் எல்லாம் எடு­ப­டாது. மாற்று அணியில் உள்­ளவர் எதி­ரிகள்.  அவர்­க­ளுக்கு எதி­ராக நாம் கள­மி­றங்­கி­யுள்ளோம். இதில் மக்கள் யாரை ஆத­ரிப்­பது என்­பதை  மக்­களே தீர்­மா­னிக்க வேண்டும்.

நாட்டில் அனைத்து பகு­தி­க­ளிலும் மாளி­கைகள் அமைக்­கப்­பட்டு ஜனா­தி­ப­திக்­கான தங்­கு­மிடம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. ஒரு வரு­டத்தில் இரண்டு ராத்­தி­ரிகள் கூட தங்­காத  மாளி­கை­களும் இவற்றில் உள்­ளன. ஆனால் அவற்றை  பரா­ம­ரிக்க கோடிக்­க­ணக்கில் செல­வுகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. எமக்கு ஒரு முறை ஆட்­சியை கைய­ளி­யுங்கள் இந்த அனைத்து சொத்­துக்­க­ளையும்  மக்கள் மயப்­ப­டுத்­திக்­காட்­டு­கின்றோம். மக்­க­ளுக்­கான சரி­யான சேவையை எவ்­வாறு செய்­வது என்­பதை நாம் செய்து கட்­டு­கின்றோம். 

எமது எதிர்­கால சமூ­கத்­துக்­கான சரி­யான இராச்­சியம் ஒன்­றினை நாம் உரு­வாக்­கிக்­காட்­டு­கின்றோம். இன்று அரச நிறு­வ­னங்கள் அனைத்­துமே நட்­டத்தில் இயங்­கு­கின்­றன. மக்கள் பெயரை கூறிக்­கொண்டு ஆட்­சி­யா­ளர்கள் கடன்­களை பெற்று செல்­கின்­றனர். இதில் ஒன்றை  கூறிக்­கொள்ள விரு­பு­கின்றேன், எமது ஆட்­சியில் சாராய விற்­ப­னை­யாளர் எவ­ருக்கும் அர­சியல் செய்ய இட­ம­ளிக்க மாட்டோம். சாராயம் விற்­ப­வர்கள் சாராய விற்­ப­னையை மட்டும் செய்­யட்டும் அர­சியல் செய்ய முடி­யாது. 

இன்று இந்த நாட்டில் கொள்­க­லன்கள் அளவில் குடு போதைப்­பொருள் கொண்­டு­வ­ரப்­ப­டு­கின்­றது. ஒரு அமைச்சர் இன்னொருவரை நேரடியாக குற்றம் சுமத்துகின்றார். ஆனால் இதனை தடுக்க எடுத்த நடவடிக்கை ஒன்றும் இல்லை. ஆகவே முதலில் இந்த அரசியல் குப்பைகளை சுத்தம் செய்ய வேண்டும். இங்கிருந்தே எமது அத்திவாரத்தை போடா வேண்டும். அதற்கே நாம் முன்வந்துள்ளோம். வீழ்ச்சி கண்டுள்ள சமூகத்தை மீண்டும் கட்டியெழுப்ப எம்மாலான சகல நடவடிக்கையும் முன்னெடுப்போம். இனியும் இந்த நாசகார ஆட்சியை முன்கொண்டு செல்ல இடமளிக்க கூடாது. இப்போதில் இருந்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆரோக்கியமான இராச்சியம் ஒன்றினை உருவாக்குவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.