இன்று நள்ளிரவு முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, September 6, 2019

இன்று நள்ளிரவு முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிப்பு!



இன்று நள்ளிரவு (06) முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பிரிமா கோதுமை மாவின் விலையை இன்று (06) முதல் அதிகரிக்க, பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளதால் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

1 கிலோ கிராம் பிரிமா கோதுமை மாவின் விலையை 5 ரூபா 50 சதத்தால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.பிரிமா நிறுவனம் நுகர்வோர் சேவைகள் அதிகார சபையின் அனுமதி இன்றி குறித்த விலை அதிகரிப்பை செய்துள்ளமையினால், நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாணின் விலை மட்டுமே அதிகரிக்கப்படுவதாகவும் ஏனைய சிறிய உணவுப் பொருட்களின் விலையில் மாற்றம் இல்லை எனவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.