மட்டக்களப்பில் வாயில் இருந்து சடலம் மீட்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, August 5, 2019

மட்டக்களப்பில் வாயில் இருந்து சடலம் மீட்பு!

மட்டக்களப்பு டச்பார் பகுதியில் உள்ள வாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

முகத்துவாரம் பாலமீன் மடு பகுதியைச் சேர்ந்த நற்குணம் சகாயநாதன் (54) என்ற 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நேற்று மீன் பிடிக்க படகில் சென்ற குறித்த நபரை இன்று காலை வாவிக்கு சென்ற மீனவர்கள் சிலர் வாவிக்குள் சடலமாக கிடப்பதைக் கண்டு காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.