சூடுபிடித்துள்ள ஜனாதிபதி தேர்தல்! அம்பாறையில் சலசலப்பை ஏற்படுத்திய துண்டுப்பிரசுரங்கள் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, August 3, 2019

சூடுபிடித்துள்ள ஜனாதிபதி தேர்தல்! அம்பாறையில் சலசலப்பை ஏற்படுத்திய துண்டுப்பிரசுரங்கள்



அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் அநாமதேய துண்டுப்பிரசுரங்கள் பரவலாக விநியோகிக்கப்பட்டுள்ளன.

கல்முனை, மருதமுனை நற்பிட்டிமுனை ஆகிய பகுதிகளிலேயே நேற்று இவ்வாறு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெயரில் தாமரை மொட்டு சின்னத்துடன் இவ்வாறு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த துண்டுப்பிரசுரங்கள் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த துண்டுப்பிரசுரமானது நான்கு பக்கங்களில் அச்சடிக்கப்பட்டுள்ளதுடன், ‘பதில்’ என்ற பெயரில் நீங்கள் இந்த நாட்டின் பெருமைக்குரிய பிரஜைகள் என்ற உப தலைப்புடன் வெளியாகியுள்ளது.

தற்போது ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், இவ்வாறு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.