ஞான­சா­ர தேரர் - மைத்திரி இடையில் வெடித்தது புதிய சிக்கல் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, July 10, 2019

ஞான­சா­ர தேரர் - மைத்திரி இடையில் வெடித்தது புதிய சிக்கல்


ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து பயங்­க­ர­வாத செயல்­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள வைத்­தி­யர்கள், பொறி­யி­ய­லா­ளர்கள் மற்றும் மௌல­விமார் உட்­பட 36 பேரை விடு­தலை செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று முன்­தினம் இரவு அவரை சந்­தித்த முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் உறு­தி­ய­ளித்தார்.

மேலும் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் கருத்­தடை சிகிச்சை மேற்கொண்டார் என்ற குற்­றச்­சாட்­டுக்கு ஆளா­கி­யி­ருந்த குரு­நாகல் வைத்­தி­ய­சா­லையின் மகப்­பேற்று வைத்­தியர் ஷாபி குற்­ற­மற்­றவர் என விசா­ர­ணை­களின் பின்பு நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளதால் அவரை விடு­தலை செய்­வ­தற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் உறு­தி­மொழி வழங்­கினார்.



தற்­போது அமு­லி­லுள்ள அவ­ச­ர­காலச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்­பட மாட்­டா­தெ­னவும் அவர் கூறினார்.

நாட்டில் தற்­போது முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கி­யுள்ள பிரச்­சி­னைகள், அவ­ச­ர­காலச் சட்­டத்தின் கீழான அநா­வ­சிய கைதுகள், அச்­சு­றுத்­தல்கள், துன்­பு­றுத்­தல்கள், பொய்ப் பிர­சா­ரங்கள் தொடர்பில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து கலந்­து­ரை­யா­டினர். இச்­சந்­திப்பு ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தில் நடை­பெற்­றது.

இச் சந்­திப்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதி­யுதீன், ஏ.எச்.எம்.பௌஸி, எம்.எஸ்.எஸ். அமீ­ரலி, அப்­துல்லாஹ் மஹ்ரூப், அலி­சாஹிர் மௌலானா, பைசல் காசிம், எஸ்.எம்.எம்.இஸ்­மாயில், எம்.ஐ.எம். மன்சூர் ஆகியோர் கலந்து கொண்­டனர்.



தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள சந்­தேக நபர்கள் 36 பேரின் விடு­தலை குறித்து சட்­டமா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத் தள­பதி ஆகி­யோ­ருடன் பேசி, தான் உடன் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கூறி­ய­தாக தெரி­யப்­ப­டுத்­து­மாறு ஜனா­தி­பதி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பைசர் முஸ்­த­பாவைக் கேட்டுக் கொண்டார்.

சிறை­யி­லி­ருந்து ஜனா­தி­ப­தியின் பொது மன்­னிப்பின் கீழ் விடு­தலை செய்­யப்­பட்ட ஞான­சார தேரர் குறித்தும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஜனா­தி­ப­தி­யிடம் முறை­யிட்­டனர். முஸ்­லிம்கள் மீதான கெடு­பி­டிகள் நாளாந்தம் அதி­க­ரித்து வரு­கின்­றன.

நீங்கள் மன்­னிப்பு வழங்கி சிறை­யி­லி­ருந்து விடு­தலை செய்த ஞான­சார தேரர் இன்று உலமா சபையை விமர்­சித்து முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ராகப் பேசி வரு­கிறார். பொய் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைக்­கிறார்.



ஜனா­தி­பதி என்ற வகையில் நீங்கள் இது தொடர்பில் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் இல்­லையேல் இன முரண்­பா­டுகள் மேலெழும் என்றும் தெரி­வித்­தனர்.

இத­னை­ய­டுத்து அங்­கி­ருந்­த­வாறே ஞான­சார தேரரை தொலை­பே­சி­யூ­டாக தொடர்­பு­கொண்ட ஜனா­தி­பதி, முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான அவ­ரது கருத்­துக்கள் மற்றும் செயற்­பா­டுகள் தொடர்பில் தனது அதி­ருப்­தி­யினை வெளி­யிட்டார்.

அத்­துடன் தொடச்­சி­யாக இவ்­வாறு செயற்­பட்டால் மீண்­டு­மொரு தடவை என்னால் உங்­க­ளுக்கு மன்­னிப்பு வழங்க முடி­யாது எனவும் சுட்­டிக்­காட்­டினார்.

இந்தச் சந்­திப்பு பற்றி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரிசாத் பதி­யுதீன் விளக்­க­ம­ளிக்­கையில், ‘பொது­பல சேனாவின் செய­லாளர் ஞான­சார தேரரை விடு­வித்­தது நீங்கள். இன்று அவர் உலமா சபையை விமர்­சிக்­கிறார். பொய்க் குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­து­கிறார்.



நீங்­களே அவரை விடு­தலை செய்­தீர்கள் என்று கூறினோம். ஞான­சார தேரர் தொடர்பில் நாம் கடும் எதிர்ப்­பி­னையும் அதி­ருப்­தி­யி­னையும் வெளி­யிட்டோம்.

அவ­ச­ர­காலச் சட்­டத்தின் கீழ் பயங்­க­ர­வா­தத்­துடன் எது­வித தொடர்­பு­மற்ற அப்­பாவி முஸ்­லிம்கள் கைது செய்து தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

டாக்டர் ஷாபி கருத்­தடை தொடர்பில் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

எனவே கைது செய்யப்பட்டு குற்றங்கள் நிரூபிக்கப்படாதவர்கள் உடன் விடுதலை செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தினோம்.

அவசரகாலச் சட்டத்தின் கீழ் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதை தெளிவுபடுத்தினோம். எங்களது முறைப்பாடுகளை செவிமடுத்து ஜனாதிபதி அவை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்’ என்றார்.