கனடாவில் துயரம்: ஏரியில் மோதி மாயமான விமானம்.. பயணிகளை தேடும் பணி தீவிரம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, July 17, 2019

கனடாவில் துயரம்: ஏரியில் மோதி மாயமான விமானம்.. பயணிகளை தேடும் பணி தீவிரம்



கனடாவில் மிதக்கும் விமானம் ஏரியில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகியுள்ளனர். 4 பேர் காணாமல் போயுள்ளதாக விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

கியூபெக்கை தலமையிடமாக கொண்ட ஏர் சாகுவேனே நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு சிறிய சார்ட்டர் விமானமான ஹவில்லேண்ட் டி.எச்.சி -2 பீவர் விமானத்தில் ஏழு பேர் பயணித்துள்ளனர். இந்த விமானம் நியூஃபவுண்ட்லேண்ட் மாகாணத்தின் ஒரு பகுதியான லாப்ரடோர் மற்றும் கனடாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள லாப்ரடாரில் விபத்துக்குள்ளானது.

விமானத்தில் விமானி, இரண்டு வழிகாட்டிகள் மற்றும் நான்கு பயணிகள் என 7 பேர் மீன்பிடி பயணம் மேற்கொண்டுள்ளனர். கிராஸ்ரோட்ஸ் ஏரியில் திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு விமானம் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

8 மணிவரை விமானம் தரையிறங்காததால் விமான நிறுவனம் ஜே.ஆர்.சி.சி என அழைக்கப்படும் கூட்டு மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தகவல் அளித்துள்ளது. இதனையடுத்து, அக்குழுவினர் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை காலை 6:30 மணியளவில் வடக்கு லாப்ரடாரில் உள்ள மிஸ்டாஸ்டின் ஏரியின் தென்கிழக்கு முனையில் ஜே.ஆர்.சி.சி குழுவினரால் விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், 3 பேர் உயிரிழந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

காணாமல் போன நான்கு பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக ஜே.ஆர்.சி.சி குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்த தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.