மருத்துவமனையில் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்த முயற்சி -யாழில் கொடுமை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, July 20, 2019

மருத்துவமனையில் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்த முயற்சி -யாழில் கொடுமை



யாழிலுள்ள மருத்துவமனை ஒன்றில் பெண் ஒருவரை கை, கால்களை கட்டி பாலியல் பலாத்காரத்திற்கு முயன்ற நபர் ஒருவர் தப்பி ஓடிய நிலையில் மீட்கப்பட்ட குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

குறித்த மருத்துவமனையில் சுத்தீகாிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரே இவ்வாறு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அதே வைத்திய சாலையில் நோயாளி ஒருவரை பராமாிப்பதற்கான நின்ற இளைஞனே குறித்த பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளாா்.

இந்நிலையில் குறித்த பெண் சத்தமிட்ட நிலையில் மக்கள் கூடுவதை அவதானித்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆடைகள் கிழிக்கப்பட்டிருந்த பெண்ணை மீட்ட மக்கள் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக மேலும் தெரிவிகபப்ட்டுள்ளது.