அடுத்த ஜனாதிபதி யார்? கருஜெயசூரியவின் அறிவிப்பு வெளியானது - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, June 4, 2019

அடுத்த ஜனாதிபதி யார்? கருஜெயசூரியவின் அறிவிப்பு வெளியானது


ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தான் தயார் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

அதோடு, சிறுவயதில் தான் இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவை சென்று பார்ப்பதுண்டு என்றும், அவர் பதவி ஆசைகளிற்கு அடிபணியாமல் நாட்டிற்கு அவசியமான விடயங்களை நிறைவேற்றுவதற்கு தனக்கு பயிற்சியளித்ததாகவும் கூறியுள்ளார்.

சுத்தமான கரங்களுடனேயே தான் தனது அரசியலை ஆரம்பித்ததாகவும், அதேபோன்று கறைபடியாத கரங்களுடனேயே அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் எனவும் சபாநாயக்கர் குறிப்பிட்டுள்ளார்.

தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை எனினும் தேசத்தை கட்டியெழுப்பும் எந்த பதவிக்காகவும் நான் என்னை ஈடுபடுத்திக்கொள்வதற்கு தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கருத்து தெரிவிக்கும்போது பலர் எனது பெயரை குறிப்பிடுகின்றதாகவும், வேறு யாராவது கட்சியில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பினால் அவர்கள் போட்டியிடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கட்சி ஐக்கியத்துடன் ஏகோபித்த முடிவையெடுத்தால் தான் அதனை ஏற்றுக்கொள்வேன் எனவும் சபாநாயக்கர் கருஜெயசூரிய இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.