கூடுதலான பங்களிப்பை வெளிநாட்டவர்களே வழங்கியுள்ளனர் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, June 18, 2019

கூடுதலான பங்களிப்பை வெளிநாட்டவர்களே வழங்கியுள்ளனர்


நாட்டின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு கூடுதலான பங்களிப்பை வெளிநாட்டவர்களே வழங்கியிருப்பதாக குறிப்பிட்ட அவர், இந்த தாக்குதலாளிகளுக்கு பெருந்தொகையான பணம் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு முன்னர் பல்வேறு பிரதேசங்களில் சில பயங்கரவாதச் செயற்பாடுகள் இடம்பெற்றதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

குருநாகல் நகர மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய வழிகாட்டல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டிற்கு பொதுவான சட்டமும் கல்விக் கொள்கையும் அவசியம் எனவும் அதற்கு அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவு அவசியமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு முன்னர் பல்வேறு பிரதேசங்களில் சில பயங்கரவாதச் செயற்பாடுகள் இடம்பெற்றிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். எனினும், இந்த விடயம் குறித்து பொறுப்புக்கூற வேண்டிய தரப்புக்கள் உரிய முறையில் கவனம் செலுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

வருங்காலத்தில் அனைத்து இன மக்களும் நாட்டில் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழல் உருவாக வேண்டுமென்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.