பௌத்த மதகுருவுக்கு ஒரு நீதி! நமக்கு ஒரு நீதியா? - கேப்பாபிலவு மக்கள் கேள்வி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, June 4, 2019

பௌத்த மதகுருவுக்கு ஒரு நீதி! நமக்கு ஒரு நீதியா? - கேப்பாபிலவு மக்கள் கேள்வி!



மூன்று வருடங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தங்களின் போராட்டத்திற்கு செவி சாய்க்காதவர்கள் பௌத்த மதகுருவின் 4 நாள் போராட்டத்திற்கு ஆதரவளிப்பது மிகவும் கவலையளிப்பதாக கேப்பாப்புலவு மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

முல்லைத்தீவில் 828 நாட்களாக நிலமீட்பு போராட்டத்தில் கேப்பாபிலவு மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிந்லியில் நேற்றை தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இதனை கூறியுள்ளனர்.

கடந்த நான்கு நாட்களாக கண்டியில் போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த மதகுருவிற்கு ஆதரவாக பலர் கோசமெழுப்பியிருந்ததாகவும்,

ஆனால் 3 வருடங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எங்களின் கோரிக்கைகள் குறித்து தென்னிலங்கையில் எவரும் செவிசாய்க்கவில்லை எனவும் அவர்கள் கவலைவெளியிட்டுள்ளனர்.

இது மிகவும் வேதனைக்குரிய விடயம் என்றும், நாமும் மனிதர்களே நாங்களும் இலங்கை பிரஜைகளே. அவ்வாறிருக்க எமக்கு மட்டும் ஏன் இதுவரையில் தீர்வு வழங்கப்படவில்லை என்றும் நில்மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபிலவு மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.