மர்மக் காய்ச்சலுக்கு 77 குழந்தைகள் பலி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, June 21, 2019

மர்மக் காய்ச்சலுக்கு 77 குழந்தைகள் பலி!



இந்தியாவின் பீகார் மாநிலத்தில் குழந்தைகளுக்கு ஏற்பட்ட  காய்ச்சல் ஒன்றின் காரணமாக 3 வாரங்களில் 77 குழந்தைகள் இறந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

10 வயதுக்கும் குறைவான குழந்தைகளே கடந்த 3 வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அங்குள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கேஜரிவால் மருத்துவமனையில் தற்போது இந்த மர்ம காய்ச்சல் காரமணாக 172 குழந்தைகள்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது, அதேவேளை இதற்கான மருத்துவம் சரியாக கண்டறிய முடியாமையினால் இறப்புக்கள் இன்னும் அதிகமாகலாம் என்று அஞ்சப்படுகிறது