கணவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்த மாமனார்... ஆத்திரத்தில் அவரை எரித்து கொன்ற மருமகள் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, May 8, 2019

கணவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்த மாமனார்... ஆத்திரத்தில் அவரை எரித்து கொன்ற மருமகள்

தமிழகத்தில் கணவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்த மாமனாரை மருமகள் எரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நெமிலி கிராமத்தை சேர்ந்தவர் சபாபதி. இவர் மகன் பிரபாகரனுக்கும், காயத்ரி என்ற பெண்ணுக்கும் 11 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

மணமான ஓராண்டுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் சமீபத்தில் தனது மகன் பிரபாகரனுக்கு சபாபதி இரண்டாம் திருமணம் செய்து வைத்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த முதல் மனைவி காயத்ரி, கடந்த இரு தினங்களுக்கு முன் மாமனாரிடம் சண்டையிட்டுள்ளார்.

இதற்கு அவர் சரியான பதிலளிக்காததால், ஆத்திரமடைந்த காயத்ரி பின்னர் தனது தாய் கலைவாணியுடன் சென்று, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சபாபதி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.

அலறல் சத்தம் கேட்டுவந்த அப்பகுதியினர் சபாபதியை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இறப்பதற்கு முன்னர் சபாபதியின் மரண வாக்குமூலத்தை வைத்து பொலிசார் காயத்ரி மற்றும் கலைவாணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்