மட்டு போதனா வைத்தியசாலையில் தற்கொலைத் தாக்குதலில் மரணித்த உடல்களிற்கு ஒரு நபர் செய்த மோசமான செயல்..! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, May 5, 2019

மட்டு போதனா வைத்தியசாலையில் தற்கொலைத் தாக்குதலில் மரணித்த உடல்களிற்கு ஒரு நபர் செய்த மோசமான செயல்..!



மட்டு போதனா வைத்தியசாலையில் மீண்டும் தங்க நகை களவு நடந்துள்ளது.

அதுவும் மிகவும் கேவலமான சம்பவமாக இதை பார்க்கவேண்டும் காரணம் கடந்த உயிர்த்தெழுந்த ஞாயிறு முஸ்லீம் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைதாக்குதலின்போது மட்டுபோதனா வைத்தியசாலையில் பிரேதபரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்ட இறந்தவர்களின் உடலில் இருந்து நகைகள் அகற்றப்பட்டது.

அகற்றப்பட்ட நகைகள் உரிய முறையில் இலக்கம் இடப்பட்டு அதனை பொறுப்பாக வழங்கப்பட்ட mines staff ஆக கடமை புரியும் நபரே இலக்கம் 02 இடப்பட்ட இறந்த உடலில் இருந்து அகற்றப்பட்ட 6 பவுன் மதிக்கதக்க நகைகளை திருடி உள்ளார்.

நாளை 06-05-2019 அதனை போலீசில் ஒப்படைக்க அது தொடர்பான நகைகளை பரிசீலனை செய்தபோது இவர் கையும் களவுமாக மாட்டியுள்ளார்.

தற்போது தன்னை காப்பாற்றுமாறும் உரிய ஆவணங்களை அகற்றுமாறும் தான் கிழக்கு மாகாண அரசியலின் மிக முக்கிய புள்ளியின் உதவியை நாடியுள்ளார்.

அது மட்டுமல்லாது ஆதாரங்களை அகற்றுங்கள் இல்லையேல் எல்லோரையும் பழிவாங்குவேன் என மிரட்டியும் உள்ளார்.

மேலும் கற்பழிப்பு சிறுவர் துஷ்பிரயோக இரகசிய மருவத்துவ மற்றும் பிரேதபரிசோதனை அறிக்கைகளையும் சில ஊடகங்களுக்கும் சட்டத்தரனிகளுக்கும் தனிப்பட்ட நபர்களுக்கும் பணம் பெற்றுக்கொண்டு விற்பனை செய்வதும் தெறியவந்துள்ளது

இவ்வாறான மனித நேயம் அற்ற முஸ்லீம் பயங்கவாதிகளைவிட கேவலமான நபரை கைது செய்ய போலீசில் ஒப்படைக்காது தமது வைத்தியசாலையின் நற்பெயர் கெட்டுவிடும் என கடந்த வருடம் மருத்துவ பயிலும் முஸ்லீம் மாணவிகளின் தங்க நகை கொள்ளையை மறைத்தது போல மீண்டும் முஸ்லீம் நபரின் தங்கநகை திருட்டை மறைக்கபோகின்றனரா மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நிர்வாகம் ???

உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என மட்டக்களப்பு மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.