வட- கிழக்கு இணைப்பு: முஸ்லீம்கள் ஆதரவு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, May 29, 2019

வட- கிழக்கு இணைப்பு: முஸ்லீம்கள் ஆதரவு!

 தெற்கில் முஸ்லீம்களிற்கு எதிரான வன்முறை நாளுக்கு நாள் வலுத்துவருகின்ற நிலையில் முஸ்லீம் தலைமைகள் தமக்கான தாயக பூமி தொடர்பில் முனைப்பு காட்ட தொடங்கியுள்ளனர். அதிலும் வடகிழக்கு இணைப்புக்கு எதிரான முஸ்லீம் தரப்புக்களது குரலும் அடங்க தொடங்கியுள்ளது. 

இதனிடையே வடக்கு – கிழக்கை இணைப்­ப­தற்­கான யோச­னையை  அர­சாங்கம்  பாரா­ளு­மன்றில் முன்­வைக்­கு­மானால் கிழக்கில் இரத்த ஆறு ஓடும் என்று நான் பேசி­னேனே தவிர தமிழ் மக்­க­ளுக்கு விரோ­த­மாக எந்த கருத்தையும் கூற­வில்லை. சில தமிழ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நான் பேசியதை  தமிழ் மக்­க­ளுக்கு விரோ­த­மாக பேசி­ய­தாக  திரி­பு­ப­டுத்தி கூறி­வ­ரு­கி­றார்கள் என கிழக்கு ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் தெரி­வித்தார்.

நான் தமிழ் மக்­க­ளுக்கு விரோ­த­மான கருத்­துக்­களை பாரா­ளு­மன்றில் கூற­வில்லை. வடக்கு – கிழக்கை இணைக்க இந்த அர­சாங்­கத்தால் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­மானால் அதை நாம் ஒரு­போதும் அனு­ம­திக்­கப்­போ­வ­தில்லை. வடக்கு வடக்­கா­கவும், கிழக்கு கிழக்­கா­கவும் இருக்கவேண்டும்.  ஆனால் இரு சமூ­கமும் ஒன்­று­பட்டு வாழ்வோம்.  இரு­மா­கா­ணங்­க­ளையும்  இணைக்க அரசு முயன்றால் கிழக்கில் இரத்த ஆறு ஓடும் என்று பேசினேன். தமிழ் மக்­க­ளுக்கு விரோ­த­மான எந்த கருத்­தையும் நான் பாரா­ளு­மன்றில்  கூற­வில்லை.

பொது­ப­ல­சேனா அமைப்­பினர் முஸ்லிம் மக்­க­ளையும் பள்­ளிவாசல்­க­ளையும் தாக்க முற்­ப­டும்­போது  அதனை அரசு தடுத்து நிறுத்­த­வேண்டும். நிறுத்­தாமல் இன­ரீ­தி­யான முரண்­பா­டு­களை தோற்­று­விக்க முனைந்தால் முஸ்லிம் இளை­ஞர்­களும் ஆயுதம் ஏந்­து­வார்கள். அந்த சூழ்­நி­லைக்கு இடமளிக்கக்கூ­டாது  என கூறி­யி­ருந்தேன். இது ஒரு பௌத்த நாடு. என­வேதான் இத்­த­கைய  இனவா­தத்­துக்கு இட­ம­ளித்தால் முஸ்லிம் இளை­ஞர்கள் ஆயுதம் தூக்­கு­வார்கள் என்று கூறியிருந்தேன். மாறாக எத­னையும் கூற­வில்லை.

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று  இடம்­பெற்ற தாக்­குதல் சம்­ப­வத்­துக்­காக  வட கிழக்கில் நாம்  துக்க தினத்தை அனுஷ்­டிக்­க­வேண்டும். அதற்கு பூரண ஆத­ரவு வழங்­குங்கள். தமிழ், முஸ்லிம் மக்கள் எல்லோரும் சேர்ந்து அதனை அனுஷ்­டிக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாராளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன்  என்னை சந்­தித்து கோரி­யி­ருந்தார். நான் அதற்கு  பூரண ஆத­ரவு  வழங்­கு­வ­தாகக் கூறினேன். அதன் பின்னர் ஊடக சந்­திப்பை நடத்­தினோம். அதில் அலிசாஹிர் மௌலா­னாவும் கலந்துகொண்டார். வட­கி­ழக்கில் கடை­களை  மூடிகாரியாலயங்களுக்கு செல்­லாமல் துக்க தினத்தை அனுஷ்­டித்து எமது கண்­ட­னத்தை தெரிவிப்போம் என ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு நாம் பேட்­டி­ய­ளித்­த­போது மிக தெளி­வாக கூறியிருந்தோம். இந்த பேட்­டியின்போது ஒரு வார்த்­தை­கூட ஹர்த்­தாலை அனுஷ்­டிக்­கு­மாறு நான் உச்­ச­ரிக்­க­வில்லை. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் என்­னுடன் சேர்ந்து பேசி­விட்டு வெளியே சென்று நான் ஹர்த்தால் அனுஷ்­டிக்க கூறி­ய­தாக சொல்­லி­யி­ருந்தார்.

அன்று மாலை தமிழ் உணர்­வாளர் அமைப்பு ஒரு துண்டு பிர­சு­ரத்தை வெளி­யிட்­டி­ருந்­தது. தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு நடத்தும் துக்­க­தி­னத்­துக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கா­தீர்கள். கிழக்கு ஆளுநருடன் சேர்ந்து கூட்­ட­மைப்பு அனுஷ்­டிக்­க­வி­ருக்கும் துக்க தினத்­துக்கு  ஆத­ரவு அளிக்கவேண்­டா­மென அத்­துண்டு பிர­சு­ரத்தில் மக்­களை அந்த அமைப்பு கோரி­யி­ருந்­தது. அதனால் சில தமிழ் பிர­தே­சங்­களில் கடைகள் கூட திறக்­கப்­பட்­டி­ருந்­தன. அத­னால்தான் என்­னவோ கூட்டமைப்பின் கோரிக்­கைக்கு தமிழ் மக்கள் செவி­சாய்க்­க­வில்லை என்­ப­தற்­கா­கவே தமது கட்சியின் செல்­வாக்கை காப்­பாற்றிக் கொள்­வ­தற்­காக சுமந்­திரன் தனது கருத்தை மாற்றியிருக்கலாம். அதேவேளை பயங்­க­ர­வா­தி­யான சஹ் ரான் என்­பவர் தேர்­தலில் என்னை தோற்க­டிப்­ப­தற்­காக மிக மோச­மாக செயற்­பட்­டவர்.

என்னை தோற்­க­டித்து எனது அர­சியல் வாழ்வை நிர்­மூ­ல­மாக்க தீவி­ர­மாக செயற்­பட்ட ஒருவர். இவர் சுயேச்­சைக்­கு­ழு­வொன்றைப் பயன்­ப­டுத்தி மேடை­களில் ஏறி காத்தான்குடி மு­ழு­வதும் எனக்கு எதி­ராக பிர­சாரம் செய்தார். முஸ்­லிம்­களில் பல குழுக்கள் உண்டு. அதில் ஒரு குழு மதம் மாறி­யவர்கள். அவர்கள் இஸ்­லாத்­தி­லி­ருந்து வெளி­யே­றி­ய­வர்கள். அக்­கு­ழு­வி­ன­ரோடு என்னை தொடர்புப­டுத்தி இவ­னுக்கு மக்கள் வாக்­க­ளிக்­கக்­கூ­டாது வாக்­க­ளிப்­பது ஹராம் என்று  மேடை மேடை­யாக பிர­சாரம் செய்தார். சஹ்ரான் இதனால் கடந்த பொதுத் தேர்­தலில் நான் 51 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டேன். இவ் வாறு எனக்கு எதிரான பொய்யான பிரசாரங்களை மேற்படி குழுவினர் மேற்கொண்டதன் காரணமாக எனக்கு ஆதரவான 2 ஆயிரம் வாக்குகளை அந்த தேர்தலில் இல்லாமல் ஆக்கினர். இவ்வாறான நிலையில் எனக்கும் தற்கொலை குண்டுதாரிகளுக்கும் எவ் வித தொடர்புமில்லை  என்றார்