வடமேல் மாகாணம், மினுவாக்கொடை பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பங்களுடன் தொடர்பில் 74 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் 33 பேர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.