சரணடைவதற்கு அவகாசம் வழங்குமாறு பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஜனாதிபதியிடம் கோரிக்கை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, April 29, 2019

சரணடைவதற்கு அவகாசம் வழங்குமாறு பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஜனாதிபதியிடம் கோரிக்கை


தீவி­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் தாமா­கவே முன்­வந்து சர­ண­டை­வ­தற்கு 24 அல்­லது 48 மணி­நேர கால­ அ­வ­காசம் வழங்­கும்­ப­டியும் அவ்­வாறு சர­ண­டை­பவர்களுக்கு புனர்­வாழ்­வுக்­கான ஏற்­பா­டு­களைச் செய்­யு­மாறும் கொழும்பு மாவட்ட மஸ்­ஜித்கள் சம்­மே­ளனம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

கொழும்பு மாவட்ட மஸ்­ஜித்­களின் சம்­மே­ள­னத்தின் தலைவர் அஸ்லம் ஒத்­மானின் கையொப்­பத்­துடன் ஜனா­தி­ப­திக்கு அனுப்­பி­வைத்­துள்ள கடி­தத்­தி­லேயே இக்­கோ­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

‘தீவி­ர­வா­தத்­துடன் நேர­டி­யா­கவோ அல்­லது மறை­மு­க­மா­கவோ தொடர்­பு­டை­ய­வர்கள் தாங்கள் தவ­றாக வழி­ந­டாத்­தப்­பட்­டுள்­ள­மையை உணர்ந்து இந்த சர­ண­டை­வ­தற்­கான கால எல்­லைக்குள் சர­ண­டைந்தால் அவர்­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிக்­கப்­ப­ட­வேண்டும். இந்த கால­அ­வ­காசம் வழங்­கப்­பட்டால் தவ­றாக வழி­ந­டாத்­தப்­பட்ட தீவி­ர­வாத இளை­ஞர்­களின் குடும்ப அங்­கத்­த­வர்கள் அவர்­களைச் சர­ண­டை­யு­மாறு கட்­டா­யப்­ப­டுத்­தலாம்.

தீவி­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்கும், சந்­தே­கத்­துக்கு இட­மான நட­வ­டிக்­கை­களை உடன் அறி­விப்­ப­தற்கும் முஸ்­லிம்கள் நாம் பூரண ஒத்துழைப்பினை வழங்குவோம். கொழும்பு மாவட்ட மஸ்ஜித்கள் சம்மேளனம் முஸ்லிம்களை இது தொடர்பில் விழிப்புணர்வூட்டி வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.