பிரான்ஸ் மக்களை கண்ணீரில் ஆழ்த்திய தேவாலய தீ விபத்து..இரண்டே நாளில் குவிந்த நிதி மட்டும் எவ்வளவு தெரியுமா? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, April 17, 2019

பிரான்ஸ் மக்களை கண்ணீரில் ஆழ்த்திய தேவாலய தீ விபத்து..இரண்டே நாளில் குவிந்த நிதி மட்டும் எவ்வளவு தெரியுமா?

பிரான்சில் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக, அதை மறு சீரமைப்பதற்காக நிதி திரட்டப்பட்டு வரும் நிலையில், இரண்டே நாட்களில் ஒரு பில்லியன் யூரோக்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 850 ஆண்டுகள் பழமையான உலகப் புகழ்பெற்ற நாட்ரி டாம் தேவாலயம் தீ விபத்ஹில் சிக்கியதால், உலக மக்கள் பலரும் தங்கள் வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.


ஐரோப்பிய கட்டிட கலைக்கு சிறந்த எடுக்காட்டாக விளங்கும் இத்தேவாலயம் 69 மீற்றர் உயரமுள்ள இரண்டு கோபுரங்களை கொண்டுள்ளது. மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருந்த போதே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்தினால் கடும் சேதத்தை சந்தித்துள்ள தேவாலயத்தை மீண்டும் அதே நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக உலக நாடுகளிடம் முக்கியமான கோரிக்கை வைத்தார்.


அதில், சிதைந்த தேவாலயத்தை மீண்டும் புதுப்பொலிவுடன் கட்டி எழுப்புவோம் எனவும், அதற்கான நிதியுதவியை பெற உலகமெங்கிலும் உள்ள மக்களிடம் கோரிக்கை முன்வைப்போம் என்று கூறியிருந்தார்.

ஐந்து ஆண்டுகளில் மீண்டும் தேவாலயம் புதுப் பொலிவு பெறும் என்று உறுதியான வாக்குறுதியை கொடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து பேராலத்திற்கு நிதிகள் குவிந்து வருகிறது.


இரண்டு நாட்களில் மட்டும் 1 பில்லியன் யூரோ நிதி நெருங்கியுள்ளதாக பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதில் குறிப்பாக பிரான்ஸின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான Bernard Arnault தமது சார்பாக 200 மில்லியன் யூரோ வழங்குவதாகவும், பிரபல தொழிலதிபருமான Francois-Henri Pinault தமது சார்பாக 100 மில்லியன் யூரோ நிதியுதவி அளிப்பதாக அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.