மன்னார் மனித புதைகுழி ஏன் அவசரமாக மூடப்பட்டது ? பின்னணி என்ன? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, April 2, 2019

மன்னார் மனித புதைகுழி ஏன் அவசரமாக மூடப்பட்டது ? பின்னணி என்ன?

மன்னார் மனித புதைகுழியில் மேலதிகமாக அடையாளப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்படாமல் காணப்பட்ட மனித எச்சங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு திடீரென மூடப்பட்டது .

இந்த நடவடிக்கைகள் நேற்று திடீரென முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதேநேரத்தில் மனித புதைகுழியானது சிறிய அளவில் அகலப்படுத்தப்பட்டு மீண்டும் பாதுகாப்பாக மூன்று மாத காலப்பகுதிக்கு மூடப்பட்டுள்ளது.

இந்த மூன்று மாத காலப்பகுதிக்குள் பேராசிரியர் ராஜ் சோம தேவவினால் மன்னார் மனித புதைகுழி தொடர்பாக அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது.

இந்த சீரமைக்கும் பணியில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ, பேராசிரியர் ராஜ் சோம தேவ உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.

மேலும் குறித்த பணியை மன்னார் நீதவான் ரீ.சரவணராஜா நேரடியாக சென்று பார்வையிட்டிருந்தார்.

கடந்த மாதம் 23ஆம் திகதி மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர், மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.

அத்தோடு மனித புதைகுழி தொடர்பான அறிக்கையை களனி பல்கலைக்கழக பேராசியர் ராஜ் சோம தேவவை மூன்று மாத காலப்பகுதியில் சமர்பிக்கும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.